நடவடிக்கை செய்தி

சுமார் 69 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கையிருப்புடன் யாழ்ப்பாண வத்திராயன் கடற்கரையில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி வத்திராயன் கடற்கரைப் பகுதியில் 2025 மார்ச் மாதம் 04 ஆம் திகதி காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் இருந்த நூற்று எழுபத்து நான்கு (174) கிலோ நூற்று இருபத்தி ஆறு (126) கிராம் கேரளா கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது.

04 Mar 2025

கொழும்பில் 3000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது

இலங்கை கடற்படையினர், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து 2025 மார்ச் மாதம் 03 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை அன்மித்த பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கைனை போது, மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டார்.

04 Mar 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 426 கிலோ பீடி இலைகளுடன் 03 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் மாதம் 03 ஆம் திகதி இரவு கல்பிட்டி கருவலக்குடா மற்றும் சின்னஅரிச்சாய் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற நானூற்று இருபத்தி ஆறு (426) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2025

சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில் 2025 மார்ச் 01 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடித்த பதினேழு பேர் (17) நபர்களுடன் சுமார் நாலாயிரத்து இருநூற்று ஐம்பத்தைந்து (4255) கடலட்டைகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

03 Mar 2025

சுமார் 78 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2025 மார்ச் 03) யாழ்ப்பாணம் அனலைத்தீவின் வடக்கு கடலில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், நூற்று தொண்ணூற்றி ஏழு (197) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

03 Mar 2025

மன்னார் பிரதேசத்தில் சுமார் 12 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், மரிச்சக்கட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், முப்பத்தொரு (31) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளது.

03 Mar 2025

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்காக கடற்படையினர் உதவினர்

இலங்கைக்கு கிழக்கே, திருகோணமலைக்கு அப்பால் அமைந்துள்ள கடலில் பல நாள் மீன்பிடி படகில் இருந்து சுகவீனமடைந்த உள்ளூர் மீனவர் ஒருவரை உடனடியாக நிலத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அன்று, 2025 மார்ச் 01 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடற்படையினர் அனுப்பி வைத்தனர்.

02 Mar 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கிண்ணியா, சின்னவேலி, சள்ளிமுனை, நந்திக்கடல், வங்காலை ஆகிய கரையோர மற்றும் கடல் பிரதேசங்களில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி மற்றும் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) பேர், இரண்டு (02) மீன்பிடி கப்பல்கள், சட்டவிரோத மீன்பிடி வலைகள் அறுபத்தைந்து (65), நான்கு (04) டெட்டனேட்டர்கள், இரண்டு (02) ஜெலக்னைட் குச்சிகள் மற்றும் மூன்று (03) அங்குலங்கள் நீளமான சேவா நூல்கள் நான்கு (04) என்பன கைப்பற்றப்பட்டன.

28 Feb 2025

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் 2025 பெப்ரவரி 22ஆம் திகதி இரவிலும், 23ஆம் திகதி காலையிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடி படகுகளுடன் முப்பத்திரண்டு (32) இந்திய மீனவர்கள் கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

23 Feb 2025

கடற்படையினரால் இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் சிலாவத்துறை, வில்பத்து, திருகோணமலை கொட்பே மற்றும் மோதர கிபுலா கால்வாய், கோவில் வீதி ஆகிய பகுதிகளில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, இருபது (20) கிராம் கேரள கஞ்சா, ஆயிரத்து ஐம்பது (1050) மில்லிகிராம் மாவா போதைப்பொருள் மற்றும் இருபத்தி ஆறு (26) கிராம் ஐஸ் போதைப்பொருள் முந்நூற்று நாற்பத்தாறு (376) மில்லிகிராம்களுடன் ஏழு (07) சந்தேகநபர்கள் கைது செய்தனர்.

21 Feb 2025