11வது தந்திரோபாய சுழியோடல் பயிற்சிப் பாடநெறி திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படையின் தந்திரோபாய சுழியோடல் பயிற்சிப் பாடநெறி பாடசாலையில் நடைபெறும் 11வது போர் தந்திரோபாய சுழியோடல் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் சின்னம் அணிவிக்கும் விழா, 2026 ஆகஸ்ட் 24 ஆம் திகதி சிறப்பு படகுகல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் தலைமையில், குறித்த தலைமையகத்தில் நடைபெற்றது.
கடற்படையின் நீருக்கடியிலான சிறப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான தகுதிகளைக் கொண்ட கடற்படை வீரர்களை சிறப்புப் படகுக் குழாமின் மூலமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் இந்தத் தந்திரோபாய மூழ்காளர் பயிற்சிப் பாடநெறி, 2026 ஜூன் 01 முதல் ஆகஸ்ட் 24 வரை வெற்றிகரமாக நடைபெற்றது. சவால்கள் நிறைந்த இந்தப் பயிற்சிப் பாடநெறியில் பங்கேற்ற 12 கடற்படை வீரர்களில் 04 கடற்படை வீரர்கள் மட்டுமே பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, தந்திரோபாயத் தகுதிச் சின்னங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.













