கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இலங்கை இராணுவத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 06) இலங்கை இராணுவத் தலைமையகத்தில் வைத்து, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.
இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதி, இராணுவத்தின் பெருமைமிக்க இராணுவ மரபுகளை செவ்வனே பறைசாற்றும் வகையில் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான அணிவகுப்பு மரியாதைகளுக்கு மத்தியில் கௌரவமான முறையில் வரவேற்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுமூகமான சந்திப்பின் போது, கடற்படைத் தளபதியும் இராணுவத் தளபதியும் இருதரப்பு ரீதியாக முக்கியமான பல விடயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இதன்போது, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை வழங்கும் முக்கிய பங்களிப்பு மற்றும் எதிர்காலத்தில் முப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், முப்படைகளுக்கு இடையே நிலவும் பலமான பிணைப்பையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் மேலும் அடையாளப்படுத்தும் வகையில், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் இறுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.













