தென்கிழக்கு கடற்படை கட்டளையில் 03 புதிய கனிஷ்ட கடற்படை திருமணமானவர்களுக்கான குடியிருப்புகள் திறந்து வைப்பு
இலங்கை கடற்படையின் கனிஷ்ட மாலுமிகளின் நலன்புரி வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் 'மஹாநாக' நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று (03) கனிஷ்ட கடற்படை திருமணமானவர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைக்கும் நிகழ்வு, 2026 ஜூலை 29 அன்று தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிமல் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.
கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்புரியை முன்னுரிமையாகக் கொண்டு இலங்கை கடற்படையினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களின் மற்றொரு முக்கிய மைல்கல்லாக இதனை குறிப்பிடலாம். இந்த புதிய வீட்டு வசதிகள் மூலம் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் வசதியான, பாதுகாப்பான மற்றும் தரமான இருப்பிட வசதிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கொமடோர் விராஜ் மல்லவஆரச்சி உட்பட அக்கட்டளையின் கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.













