SPORT NEWS 2026

கட்டளைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது

02 Aug 2026

அணிகளுக்கு இடையிலான கயிறு இழுத்தல் போட்டியானது 2026 ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை கப்பலான பண்டுகாபய நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தை ஏவுகணைக் கட்டளையும், பயிற்சிப் கட்டளைக்கும் பெண்களுக்கான சாம்பியன் பட்டத்தையும் வென்றெடுத்தன.

பதினான்கு (14) அணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், ஏவுகணைக் கட்டளையும் மேற்கு கடற்படைப் கட்டளைக்கும் இடையே நடைபெற்றது. இதில் ஏவுகணைக் கட்டளை சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது. அத்துடன், பெண்களுக்கான இறுதிப் போட்டியானது பயிற்சிப் கட்டளைக்கும் வட மத்திய கடற்படை கட்டளைக்கும் இடையே நடைபெற்ற நிலையில், அதில் பயிற்சிப் கட்டளைக்கும் சாம்பியன் பட்டத்தைச் சுவீகரித்துக் கொண்டது.

மேலும், இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா மற்றும் கடற்படை கயிறு இழுத்தல் சங்கத்தின் தலைவர் கொமடோர் தர்ஷன அமரகோன் உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Accessibility Tools