நிகழ்வு-செய்தி

சதுப்புநில தாவரங்கள் வெட்டிய ஆறு நபர்கள் (06) கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 11 ஆம் திகதி மன்னார் முந்தலம்பிட்டி பகுதியில் கடற்படை மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது சதுப்புநில தாவரங்கள் வெட்டிய 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Apr 2020

வெளிநாட்டு வணிகக் கப்பலில் இருந்த நோய்வாய்ப்பட்ட நபரை கடற்படையினரால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழத்து வரப்பட்டது

வெளிநாட்டு வணிகக் கப்பலான Maersk Avon கப்பலில் நோய்வாய்ப்பட்ட ஒருவரை கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழத்து வர 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

12 Apr 2020

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை றாகம வடக்கு கொழும்பு போதனா மருத்துவமனை, மினுவங்கொடை அடிப்படை மருத்துவமனை, புத்தளம் சஹிரா முஸ்லிம் கல்லூரி மற்றும் மருதானை, கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள வங்கி வளாகங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

12 Apr 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை கொழும்பு தேசிய மருத்துவமனையில் மற்றொரு கண்டுபிடிப்பை நிறுவியுள்ளது

இலங்கை கடற்படையால் உருவாக்கப்பட்ட இரண்டு புதிய எதிர்மறை அழுத்தம் தனிப்படுத்தல் அறைகள் (Negative Pressure Isolation Room) இன்று (2020 ஏப்ரல் 11) கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிறுவப்பட்டன.

11 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 26 நபர்கள் புறப்பட்டு சென்றனர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 26 நபர்கள் 2020 ஏப்ரல் 08,10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

11 Apr 2020

கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கான சுகாதார ஆடைகள் தொகுப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான 3400 மருத்துவ உடைகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கிடம் இன்று (2020 ஏப்ரல் 11) சுகாதார அமைச்சில் ஒப்படைக்கப்பட்டன.

11 Apr 2020

மன்னார், வட்டகண்டாய் பகுதியிலிருந்து நாங்கு 60 மிமி மோட்டார் ரவைகள் கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன

மன்னார், வட்டகண்டாய் பகுதியில் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நான்கு மோட்டார் ரவைகள் கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன.

11 Apr 2020

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு கப்பலை கடற்படை கைப்பற்றியது

2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஆழ்கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்கள் வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் ஏராளமான ஹெராயின், ஐஸ் மற்றும் கெட்டமைன் ஆகிய போதைப்பொருளும் போதைப்பொருள் கொண்டு வந்த விற்பனையாளர்கள் மற்றும் பல வெளிநாட்டுக் கப்பல்களும் கைப்பற்றியது.

11 Apr 2020

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையால் கைது

ரக்வான பகுதியில் இன்று (2020 ஏப்ரல் 10,) நடத்தப்பட்ட கால் ரோந்துப் பணியின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவரை கடற்படை கைது செய்தது.

10 Apr 2020

அனுமதி இல்லாமல் மதுபானம் வைத்திருந்த ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து இன்று (2020 ஏப்ரல் 10,) சிலாபம், விஜய கட்டுபொத்த பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதி இல்லாமல் மதுபானம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

10 Apr 2020