நிகழ்வு-செய்தி

மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் நடவடிக்கையின் போது மூன்று சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையால் கைது

கடற்படை இன்று (2020 ஏப்ரல் 10) கொடுவமட பகுதியில் நடத்திய ரோந்துப் நடவடிக்கையின் போது, மட்டக்களப்பு களப்பு பகுதியில் வீசப்பட்ட 03 தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

10 Apr 2020

கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிறுவப்பட்டன

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை கொழும்பு தேசிய மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவின் பயன்பாட்டிற்காக (2020 ஏப்ரல் 10) ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.

10 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக பெயரிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைத் தவிர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படை 2020 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

10 Apr 2020

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 07 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை கலுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலை, கொழும்பு துறைமுகம் ஜெயா கொள்கலன் முனையத்தில் நிர்வாக கட்டிடம், மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சகம் ஆகிய இடங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

10 Apr 2020

ஹெரொயின் கொண்ட ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை ஒருங்கினைந்து ஹெராயின் கொண்ட ஒருவரை சிலாவத்துர மல்வத்து ஒய பாலம் அருகில் 2020 ஏப்ரல் 09 ஆம் திகதி கைது செய்தது.

10 Apr 2020

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை, இராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து 2020 ஏப்ரல் 09, அன்று மன்னார், தாரபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 Apr 2020

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி மாபலகம பாலத்தில் சிக்கிய குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

காலி மாபலகம பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் அகற்றப்பட்டது.

09 Apr 2020

சுய தனிமைப்படுத்தலை மீறிய ஜா-எல சுது வெல்ல பகுதியில் 28 பேர் கடற்படையால் கைது

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 28 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் இன்று (2020 ஏப்ரல் 09) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

09 Apr 2020

புதையல் தோண்டிய நபர்கள் கடற்படையால் கைது

புத்தளம், எதலை, எம்புகுடெல்ல பகுதியில் 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது புதையல் தோண்டிய 06 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

09 Apr 2020

முல்லைதீவு வட்டுவாக்கல் பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 04 பேர் கடற்படையினரால் கைது

ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ள போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன் மற்றும் காய்கறிகளை கொண்டு சென்ற இரண்டு கெப் வண்டிகளுடன் நான்கு நபர்களை (04) 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி முல்லைதீவு வட்டுவாக்கல் பகுதியில் அமைக்கப்பட்ட சாலைத் தடையில் கடமையில் இருந்த கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டது.

09 Apr 2020