நிகழ்வு-செய்தி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் கடற்படை வீரர் பூரண குணத்துடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

2020 ஏப்ரல் 25 ஆம் திகதி குறித்த கடற்படை வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின் பின் அவர் குணமடைந்து 2020 மே 03 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

04 May 2020

கொடவெஹெர பகுதி மையமாக கொண்டு மேலும் ஒரு கிருமி நீக்கும் திட்டம் கடற்படை மேற்கொண்டுள்ளது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட மேலும் ஒரு கிருமி நீக்கும் திட்டம் 2020 மே 03 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தில், கொடவெஹெர பிரதேச செயலகத்தில் உள்ள திகந்னேவ மற்றும் கும்புக்வெவ கிராமங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

03 May 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் மற்றும் இரண்டு படகுகள் (02) 2020 மே 02 ஆம் திகதி முந்தம்பிட்டி, பெரியஆரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டது.

03 May 2020

ஹெரொயின் கொண்ட சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காலி ஊழல் தடுப்புப் பிரிவு இனைந்து 2020 மே 02 ஆம் திகதி ஹெரொயின் கொண்ட ஒருவரை காலி,தலாபிடிய பகுதியில் வைத்து கைது செய்தனர்.

03 May 2020

லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் ‘மனுசத் தெரன’ திட்டத்தால் கடற்படைக்கு குடிநீர் போத்தல்கள் மற்றும் நீர் வடிகட்டி இயந்திரங்கள் ‘Water Dispenser’ நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான குடிநீர் போத்தல்கள் மற்றும் நீர் வடிகட்டி இயந்திரங்கள் ‘Water Dispenser’ இன்று (2020 மே 02) கடற்படை தலைமையகத்தில் வைத்து லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

02 May 2020

வெடிக்காத 155 மிமி பீரங்கி ரவையொன்று கடற்படை மீட்டுள்ளது

மன்னார் நச்சிகுடா கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் இருந்து வெடிக்காத 155 மிமி பீரங்கி ரவையொன்று (01) 2020 மே 01 ஆம் திகதி கடற்படையால் மீட்கப்பட்டது.

02 May 2020

கடற்படை வீரர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக சீதுவ ‘சன்ஹில்’ சொகுசு விடுமுறை விடுதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது

சீதுவ பகுதியில் உள்ள ‘சன்ஹில் குழு நிறுவனத்திற்கு (Sunhill Group of Companies Pvt Ltd) சொந்தமான 23 அறைகள் கொண்ட ‘சன்ஹில்’ சொகுசு விடுமுறை விடுதி கடற்படை வீரர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக 2020 மே 02 ஆம் திகதி கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

02 May 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 06 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 06 நபர்கள் 2020 மே 01 தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

02 May 2020

கடற்படை காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஐந்து (05) நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடற்படை காவல்துறையினருடன் இணைந்து 2020 மே 01 அன்று திருகோணமலை தோப்பூர் செல்வநகர் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஐந்து (05) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

02 May 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் 2020 மே 01 ஆம் திகதி திருகோணமலை துறைமுக கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

02 May 2020