நிகழ்வு-செய்தி

கொவிட் 19 தடுப்பூசி திட்டத்திற்கு கடற்படையின் ஆதரவு

கொவிட் 19 அபாயத்தை தடுப்பதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் கோவிட் 19 அச்சுறுத்தலை எதிர்கொண்டு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இன்று (2021 மே 11) “சினோபார்ம்” (Sinopharm) தடுப்பூசியை கம்பஹ மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மருத்துவ அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கடற்படை வழங்கியது.

11 May 2021

கொவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சுகாதாரத் துறையில் வசதிகளை மேம்படுத்த கடற்படையின் பங்களிப்பு

தற்போதுள்ள கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்க திட்டங்களுக்கு ஆதரவாக மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கோவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த இலங்கை கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

10 May 2021

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் விழுந்திருந்த பணப்பையை திருப்பி உரிமையாளரிடம் ஒப்படைத்த கடற்படை வீரர் கடற்படைத் தளபதியால் பாராட்டப்பட்டார்.

2021 ஏப்ரல் 27 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலுக்கு முன்னால் சாலையில் விழுந்திருந்த ஒரு பணப்பையும் அதில் உள்ள பணத்தையும் உரிமையாளரிடம் ஒப்படைத்த கடற்படை வீரர் ஏ.ஜி.எச்.எஸ் உதய குமார, எக்ஸ்.எஸ் 100126, வின் இந்த நற்செயலைப் பாராட்டி அவருக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2021 மே 10) கடற்படை தலைமையகத்தில் பாராட்டு கடிதத்தை வழங்கினார்.

10 May 2021

கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்று பூஸ்ஸ கடற்படை தளத்தில் நிறுவப்பட்டது

கொவிட் 19 நோய்த்தொற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவாக, 162 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்றை 2021 மே 04 ஆம் திகதி காலி, பூஸ்ஸ கடற்படை தளத்தில் நிறுவப்பட்டது.

05 May 2021

கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்று கடற்படையால் கம்பஹ பகுதியில் நிறுவப்பட்டது

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை வலுப்படுத்தி, கம்பஹ பகுதியில் ஒரு இடைநிலை சிகிச்சை மையமொன்றை நிறுவ 2021 மே 02 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

04 May 2021

ரியர் அட்மிரல் சஜித் கமகே கடற்படை வெளியீட்டு கட்டளையின் புதிய கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

கடற்படை வெளியீட்டு கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சஜித் கமகே 2021 ஏப்ரல் 30 ஆம் திகதி கடற்படை வெளியீட்டு கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

01 May 2021