நிகழ்வு-செய்தி

கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரயவில் திறந்து வைக்கப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக, வட மத்திய மாகாணத்தின் துணைத் தலைமைத் தலைவரான புனிதபாத பன்வில குனரத்ன நாயக்க தேரரின் வேண்டுகோளின் படி, பண்டுகலம சிரி சம்புத்த விஹாரயவுக்கு இணைந்த ரொடவெவ,எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரய வளாகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவியால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2021 ஜூலை 17 அன்று திறந்து வைக்கப்பட்டன.

19 Jul 2021

ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன 2021 ஜூலை 16 ஆம் திகதி வட மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

17 Jul 2021

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற கடற்படை வீராங்கனைக்கு தர உயர்வு

பெண்கள் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 போட்டி மூலம் இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்று இலங்கை கடற்படைக்கும் நாட்டிற்கும் மகத்தான புகழ் கொண்டு வந்த இலங்கை கடற்படையில் பணியாற்றும் பெண் மாலுமியான டெஹானி எகொடவெலவுக்கு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவினால் ரூ. 250,000.00 பெறுமதிவாய்ந்த நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

16 Jul 2021

வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் வெற்றிகரமாக நிறைவு

வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் ஜூலை 13 முதல் 15 வரை இடம்பெற்றது, நேற்றைய தின (ஜூலை 15) நிகழ்வினை குறிக்கும் வகையில் திரைநீக்கம் செய்யப்பட்டது. கடற்படை அதிகாரிகளின் பிரதி பிரதானியும் தற்போதையவட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் தலைவருமான ரியர் அட்மிரல் வை என் ஜயரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தொடர்தேசிய நீரியல் வள ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமாரி முகவர் நிலையம், கடற்படையின்தேசிய நீரியல் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

16 Jul 2021

வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு புதிய ஹீமோடையாலிசிஸ் பிரிவு

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையின் புதிதாக நிறுவப்பட்ட ஹீமோடையாலிசிஸ் பிரிவு (Hemodialysis Unit ) இன்று (2021 ஜூலை 15) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலமையில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

15 Jul 2021

கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் ஒன்பதாவது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் ஒன்பதாவது பதிப்பு இன்று (2021 ஜூலை 14) கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தளபதி கேப்டன் லசந்த விதானகேவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

14 Jul 2021

கொமாண்டர் பராக்ரம சமரவீர நினைவு உள்ளரங்க விளையாட்டு வளாகம் வெலிசர கடற்படை வளாகத்தில் திறக்கப்பட்டது

புதிதாக கட்டப்பட்ட இலங்கை கடற்படை உள்ளரங்க விளையாட்டு வளாகம் கொமாண்டர் பராக்ரம சமரவீர நினைவு உள்ளரங்க விளையாட்டு வளாகம் என்று பெயரிடப்பட்டு இன்று (2021 ஜூன் 23) கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தளபதியுமான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் மற்றும் கொமாண்டர் (இறந்த) பராக்ரம சமரவீர கடற்படை அதிகாரியின் அன்புள்ள மனைவி திருமதி சுதர்ஷனி சமரவீரவின் பங்கேற்புடன் வெலிசர கடற்படை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

23 Jun 2021

“நீர்வளவியலில் நூறு ஆண்டுகால சர்வதேச ஒத்துழைப்பு” - இலங்கை கடற்படை நீர்நிலை சேவை உலக நீர்நிலை தினத்தை கொண்டாடுகிறது.

மனிதன் நீர் வழியாக செல்லத் தொடங்கியதிலிருந்தே நீர்நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கண்டங்களுக்கு செல்ல ஒரு கடல் வரைபடம் தேவைப்பட்டதுடன் மேலும் தரவு சேகரிப்பு முதல் வரைபடம் வரை சர்வதேச தரங்களின் மிக உயர்ந்த தரநிலைகள் வரை அனைத்து பணிகளையும் செய்ய நீர்நிலை பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தேவையான நீர் தொடர்பான அளவீடுகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் நீர்நிலை சேவை பெரும் பங்களிப்பை செய்கிறது. இலங்கை உட்பட 94 நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு (International Hydrographic Organization) , 15 பிராந்திய ஹைட்ரோகிராஃபிக் கமிஷன்கள் (Regional Hydrographic Commissions) மூலம் உலகளவில் நீர்நிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு 1921 ஜூன் 21, இல் மொனாக்கோவில் நிறுவப்பட்டது, மேலும் 2021 ஜூன் 21, அன்று அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

21 Jun 2021

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான கடற்படைப் பயிற்சி

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் படையின் ' KASHIMA ' மற்றும் ' SETOYUKI ' என்ற இரண்டு பயிற்சி போர்க்கப்பல்கள் (02) மூன்று நாள் (03) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2021 ஜூன் 18 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன் இன்று (20 ஜூன் 2021) இலங்கையில் இருந்து புறப்படும் போது குறித்த கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் பயிற்சியொன்று மேற்கொண்டுள்ளது.

20 Jun 2021

கடற்படையினரால் தலைமன்னார் பிரதேச வைத்தியசாலையில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களுக்காக திறந்து வைப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக தலைமன்னார் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் அவர்களால் 2021 ஜூன் 19 அன்று திறந்து வைக்கப்பட்டது.

20 Jun 2021