நிகழ்வு-செய்தி

கடற்படை பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு ICU Ventilator இயந்திரம் மற்றும் இரண்டு Digital BP Monitor இயந்திரங்கள் (02) கொமான்டர் (ஓய்வு) எல்.பீ.கே ஹேவகேவினால் குறித்த வைத்தியசாலைக்கு வழங்கவதுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் அடையாளமாக ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2022 ஜனவரி 05) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

05 Jan 2022

கடற்படை 'P-601' கப்பலை உத்தியோகபூர்வமாக இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது

இலங்கை கடற்படைக் கப்பல் குழுவில் இணைக்கப்பட்டு சுமார் நான்கு தசாப்தங்களாக கடற்படையின் விலைமதிப்பற்ற சேவையில் ஈடுபட்ட பின் 2021 செப்டம்பர் 30 ஆம் திகதி கடற்படை சேவையிலிருந்து விடைபெற்ற இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர (P 601) 2022 ஜனவரி 03 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது இலங்கை கடலோர காவல்படையிடம் சம்பிரதாயமாக கையளிக்கப்பட்டுள்ளது.

04 Jan 2022

தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன கடமையேற்பு

தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன 2022 ஜனவரி 03 ஆம் திகதி இலங்கை தொண்டர் கடற்படை தலைமையகத்தில் வைத்து கடமைகளை தொடங்கினார்.

04 Jan 2022

இலங்கை கடற்படை அரச சேவையாளர் உறுதிமொழியுடன் புது வருடத்தில் கடமைகளை தொடங்கியது

இலங்கை கடற்படையினர் 2022 புதிய ஆண்டில் கடமைகள் தொடங்குவதற்கு முன்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (2022 ஜனவரி 03) காலை கடற்படைத் தலைமையகத்தில் அரச சேவையாளர் உறுதிமொழி வாசித்தனர்.

03 Jan 2022

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு தொடர்பான கடமைகள் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் 2022 ஜனவரி 01 ஆம் திகதி இலங்கை இராணுவம் மூலம் இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது. இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

02 Jan 2022

கடற்படைத் தளபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதிய எதிர்பார்ப்புகளுடன் 2022 ஆம் ஆண்டுக்கு காலடி வைத்த கடற்படை மற்றும் சிவில் ஊழியர்களுக்கும், உங்கள் குடும்பங்களின் அனைவருக்கும் கடற்படைத் தளபதி என்ற முறையில் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

31 Dec 2021

கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்ச்சி

கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படையினரின் பங்கேற்புடன் இரத்த தான வழங்கும் நிகழ்ச்சியொன்று 2021 டிசம்பர் 30 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தில் இடம்பெற்றது.

31 Dec 2021

தென்கிழக்கு கடற்படை கட்டளையில் பூப்பந்து பயிற்சி போட்டி தொடரொன்று நடைபெற்றது

தென்கிழக்கு கடற்படை கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூப்பந்து பயிற்சி நிகழ்ச்சி மற்றும் போட்டி தொடரொன்று 2021 டிசம்பர் மாதம் 28 முதல் 30 ஆம் திகதி வரை தென்கிழக்கு கடற்படை கட்டளை பூப்பந்து மைதான வளாகத்தில் நடைபெற்றது.

31 Dec 2021

நான்கு கடற்படை வீரர்களுக்கு சர்வதேச கடல்சார் நிறுவனத்தினால் அங்கீகாரமளிப்பு

நான்கு கடற்படை வீரர்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான கடலில் சாகசம் மிகுந்த துணிச்சலுக்கான ஐஎம்ஓ விருது (2021- IMO Award for Exceptional Bravery at Sea) வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. கடற்படை வீரர்களின் துணிச்சலைக் கருத்தில் கொண்டு சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ (International Maritime Organization – IMO) வினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

30 Dec 2021

கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்ச்சி

கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்குபற்றுதலுடன் திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் இரத்தம் வழங்கும் நிகழ்ச்சியொன்று அண்மையில் இடம்பெற்றது.

29 Dec 2021