கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரயவில் திறந்து வைக்கப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக, வட மத்திய மாகாணத்தின் துணைத் தலைமைத் தலைவரான புனிதபாத பன்வில குனரத்ன நாயக்க தேரரின் வேண்டுகோளின் படி, பண்டுகலம சிரி சம்புத்த விஹாரயவுக்கு இணைந்த ரொடவெவ,எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரய வளாகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவியால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2021 ஜூலை 17 அன்று திறந்து வைக்கப்பட்டன.

19 Jul 2021

சேவா வனிதா பிரிவு மூலம் கிழக்கு கடற்படை கட்டளையில் இரத்த தான நிகழ்வொன்று நடத்தப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துப் படி கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி 2021 மே 24 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வுக்கு இணையாக கிழக்கு கடற்படை கட்டளையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு துனை தலைமை அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்னவின் பங்கேற்புடன் இன்று (2021 மே 30) இலங்கை கடற்படை கப்பல் 'திஸ்ஸ' சேவா வனிதா முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

30 May 2021

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குழந்தைகள் மற்றும் பிற நோயாளிகளின் நலனுக்காக சுகாதார பொருட்கள், மின் உபகரணங்கள் மற்றும் Medical Oxygen Cylinder நன்கொடையாக வழங்களும் நிகழ்வு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன தலைமையில் இன்று (2021 மே 25) அபேக்ஷா வைத்தியசாலை வழாகத்தில் நடைபெற்றது.

25 May 2021

ஜினானந்த குழந்தைகள் மேம்பாட்டு மையத்திற்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக உலர் உணவுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்னவின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் இன்று (2021மே 25) ஸ்ரீ சுகத விஹாரயவில் உள்ள ஸ்ரீ ஜினானந்த குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வசிக்கும் தேரர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வொன்று ஸ்ரீ சுகத விஹார வளாகத்தில் நடைபெற்றது.

25 May 2021

கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய இரத்த தான நிகழ்வு அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி நடத்தப்பட்டது

தற்போதுள்ள கொவிட் 19 தொற்றுநோய் காரணத்தினால் நன்கொடையாளர்களுக்கு இரத்த தானம் செய்வது கடினமானது. இக் காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளிலும், தேசிய இரத்த வங்கியிலும் உள்ள இரத்த இருப்புகள் குறைந்துவிட்டன. இதன் விளைவாக, இரத்த வங்கி மற்றும் அபேக்ஷா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் இருந்து இரத்த தானம் செய்யுமாரு கோரிக்கைகள் வந்துள்ளது.

24 May 2021

வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் புதிய குழந்தைகள் வார்டு திறக்கப்பட்டது

கடற்படை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் புதிய வசதியுடன் கட்டப்பட்ட குழந்தைகள் வார்டு இன்று (2021 மே 14) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வருகையுடன் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

14 May 2021

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்துப் படி கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக கடற்படையில் பணியாற்றி வரும் கடற்படை வீரர் ஜே.பி.எஸ். சஞ்சீவ இ.டி 33240 யின் வேண்டுகோளின் பேரில் அருடைய நோயுற்ற தந்தைக்கு சக்கர நாற்காலியொன்றை வழங்குதல் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் பணியாற்றும் போது திடீரென இறந்த கடற்படை வீரர் பி.வை.எஸ் சுமனசிறி எஸ்.டபிள்யூ 30189 வின் மனைவியின் வேண்டுகோளின் பேரில் அவர்களது மூன்று குழந்தைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு மடிக்கணினியை வழங்குதல் இன்று (2021 மே 12) கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் கடற்படை தலையைகத்தில் நடைபெற்றது.

12 May 2021

முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலைக்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக படுக்கைகள் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்துப்படி, சேவா வனிதா பிரிவின் நிதியால் முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலையின் சிறப்பு மகப்பேறு பிரிவில் கோவிட் -19 நோய்த்தொற்றுடைய தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதுக்காக HDU/ICU (High Dependency Unit / Intensive Care Unit) வகையில் 03 படுக்கைகள், இன்று (12 மே 2021) கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலையின் இயக்குநர் டாக்டர் பிரியந்த கருணாரத்னவுக்கு, சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்னவினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

12 May 2021

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஊனமுற்ற கடற்படை போர்வீரர்களின் நல்வாழ்வு குறித்து விசாரித்தார்

இலங்கை கடற்படையில் பணியாற்றும் போது ஊனமுற்ற போர்வீரர்களுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் கட்டப்பட்ட ‘Anchorage Naval Care Center’ இல் இருக்கும் ஊனமுற்ற போர்வீரர்களின் நல்வாழ்வு குறித்து விசாரிக்க 2021 ஏப்ரல் 23 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன விஜயமொன்று மேற்கொண்டுள்ளார்.

25 Apr 2021

கடற்படை நாய் பிரிவுக்கான அவசர சிகிச்சை பிரிவு இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தில் திறந்து வைக்கப்பட்டன

கடற்படை சேவா வனிதா பிரிவின் ஆதரவின் கீழ் கெமுனு நிறுவன வளாகத்தில் கட்டப்பட்ட கடற்படை நாய் பிரிவுக்கான புதிய அவசர சிகிச்சை பிரிவு (Emergency Treatment Unit), கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவினால் 2021 ஏப்ரல் 23 அன்று திறந்து வைக்கப்பட்டது.

25 Apr 2021

காப்பகங்கள்