நிகழ்வு-செய்தி

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) கடற்படையினரால் கைது

திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியில் நோர்வே தீவின் தென்மேற்கில் உள்ள கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள், 2020 மே 23 ஆம் திகதி கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

24 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 10 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 293 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 10 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 23 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

24 May 2020

பாதிக்கப்பட்ட மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் வழங்கப்பட்டது

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் இப்போது இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பலின் ஆதரவுடன் மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றன. இவ்வாரு வருகின்ற மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான எரிபொருளை சமுதுர கப்பல் இன்று (2020 மே 23) வழங்கியுள்ளது.

23 May 2020

வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையின் பின், கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு 29 நபர்கள் வெளியேறினர்.

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் அனுராதபுரம் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த 29 நபர்கள் 2020 மே 22 மற்றும் 23 திகதிகளில் குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.

23 May 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைந்து 2020 மே 22 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கொந்னோருவ பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

23 May 2020

ஹெரொயின் கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து 2020 மே 22 ஆம் திகதி மன்னார் தேவம்பிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது ஹெரொயின் போதைப்பொருள் கொண்ட ஒரு நபர் (01) கைது செய்யப்பட்டார்.

23 May 2020

சட்டவிரோத போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து 2020 மே 22 ஆம் திகதி திருகோணமலை, ஒர்ஸ்ஹில் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

23 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 33 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 33 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 22 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

23 May 2020

‘மவுபிம வெனுவென் எக்வெமு’ தொண்டு திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பல பொருட்கள் கடற்படைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல பொருட்கள் ‘மவுபிம வெனுவென் எக்வெமு’ தொண்டு திட்டத்தின் கீழ் ஷர்த்தா தொலைக்காட்சி மற்றும் மஹமெவுனாவ தியான மையம் இனைந்து இன்று (2020 மே 22) கடற்படையிடம் வழங்கியுள்ளது.

22 May 2020

சமுதுர கப்பல்‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிப் படகுகளை நெருங்கியது.

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட பல மீன்பிடி படகுகளுக்கு தேவையான ஆதரவையும் எரிபொருளையும் வழங்க 2020 மே 21 ஆம் திகதி புறப்பட்டு சென்ற இலங்கை கடற்படையின் சமுதுர கப்பல் இப்போது குறித்த மீன்பிடி படகுகளை அடைந்துவிட்டு, அவர்களுடன் தகவல்தொடர்புகளை உருவாக்கியுள்ளது.

22 May 2020