நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் ஏ.ஏ.ஆர்.கே பெரேரா கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ஏறக்குறைய 33 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் ஏ.ஏ.ஆர்.கே பெரேரா இன்று (2020 நவம்பர் 30) ஓய்வு பெற்றார்.

30 Nov 2020

கடற்படை மரைன் படைப்பிரிவில் பயிற்சி பெற்ற 54 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவில் இணைக்கப்பட்டு அடிப்படை தகுதி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் ஐம்பது (50) மாலுமிகள் 2020 நவம்பர் 24 ஆம் திகதி திருகோணமலை சம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தில் வெளியேறினர்.

25 Nov 2020

கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரத்தில் கொடி ஆசீர்வாதம் பூஜை மற்றும் “கஞ்சுக” பூஜை நடைபெற்றது

2020 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த விழா 2020 நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

13 Nov 2020

புதிய விமானப் படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் 18 வது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று கடற்படைத் தலைமையகத்தில் (நவம்பர், 04) சந்தித்தார்.

09 Nov 2020

திருகோணமலை கடலுக்கு அடியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கடற்படை பங்களிப்பால் அகற்றப்பட்டது.

நீருக்கடியில் சேகரிக்கப்பட்ட பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டமொன்று 2020 நவம்பர் 2, அன்று திருகோணமலை கடல் பகுதி மையமாக கொண்டு கடற்படையால் மேற்கொள்ளப்பட்டன.

03 Nov 2020

கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியை சந்திப்பு

இலங்கை கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க,இன்று (2020 நவம்பர் 02) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

02 Nov 2020

தர இறக்கம் செய்யப்பட்ட கடற்படையின் இரண்டு கப்பல்களும் திருகோணமலை கடலுக்கடியில் மூழ்கடிப்பு

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக விலைமதிப்பற்ற சேவையின் பின்னர் தர இறக்கம் செய்யப்பட்ட இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'வீரயா' மற்றும் 'ஜகத்தா' ஆகிய இரு கப்பல்கள் 2020 அக்டோபர் 22 மற்றும் 26 ஆம் திகதிகளில் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனினங்கள் இனப்பெருக்கம் செய்யும் தளமாக பயன்படுத்தும் வகையில் திருகோணமலை கடலுக்கு அடியில் மூழ்கடிப்புச் செய்யப்பட்டது.

30 Oct 2020

இலங்கை விமானப்படைத் தளபதி கடற்படைத் தளபதியை கடற்படைத் தலைமையகத்தில் சந்திப்பு

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் இன்று (2020 அக்டோபர் 29) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

29 Oct 2020

அனுராதபுரம், எத்தலகல ஆரண்ய சேனாசனத்தில் கடற்படையால் கட்டப்படவுள்ள ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

அனுராதபுரம், மீகலேவ எத்தலகல ஆரண்ய சேனசனத்தில் ஸ்தூபிக்கான அடிக்கல் நாட்டும் விழா 2020 அக்டோபர் 23 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை தளபதியின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஸ்தூபியின் கட்டுமானப் பணிகள் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்படும்.

26 Oct 2020

அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் மிஹிந்தலை புனிதப் பகுதியில் புனரமைப்பு பணிகள் தொடங்கிய விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.

அனுராதபுரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை ராஜமஹா விகாரையில் உள்ள மிஹிந்து மகா சேயா, மிஹிந்து குகை மடாலயம் மற்றும் புனித ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை 2020 அக்டோபர் 24 ஆம் திகதி மதியம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கழந்து கொன்டார்.

25 Oct 2020