நிகழ்வு-செய்தி

கடற்படை வடக்கு தீவுகளில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கியது

வடக்கு கடற்படை கட்டளை மூலம் யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்று வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவின் தலைமையில் 2021 மார்ச் 14 ஆம் திகதி மண்டதீவில் இடம்பெற்றது.

16 Mar 2021

திருகோணமலை, கடற்படை மற்றும் கடல் அறிவியல் பீடத்திக்கு இந்திய கடற்படையிலிருந்து கற்றல் ஆதரவு

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான நட்பின் விரிவாக்கமாக இந்திய கடற்படை வழங்கிய டார்பிடோ மற்றும் எரிவாயு விசையாழியின் வெட்டு மாதிரிகள் உட்பட கற்றல் உதவிகளை இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் அதி மேதகு கோபால் பக்லே (Gopal Baglay), அவர்களினால் 2021 மார்ச் 14 ஆம் திகதி திருகோணமலை, கடற்படை மற்றும் கடல் அறிவியல் பீடத்திக்கு வழங்கப்பட்டது.

15 Mar 2021

கடற்படையின் பங்களிப்பால் யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்கரை பிரதேசத்தில் 700 கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கண்டல் தாவரங்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 700 கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் திட்டமொன்று வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய தலைமையில் இன்று (2021 மார்ச் 14) நடைபெற்றன.

14 Mar 2021

கடற்படை மனிதவள பங்களிப்புடன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை பாதுகாப்பு செயலாளர் திறந்து வைத்தார்

2021 மார்ச் 10 ஆம் திகதி இடம்பெற்ற கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு தின உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீடு விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்கள் பங்கேற்றார். அங்கு கடற்படையின் மனிதவள பங்களிப்புடன் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்கேற்புடன் பாதுகாப்பு செயலாளரால் திறந்து வைக்கப்பட்டது.

11 Mar 2021

விரைவு நடவடிக்கை படகுகள் படை தகுதிப் பெறும் பாடநெறியை நிறைவு செய்த 37 கடற்படை உறுப்பினர்களுக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டன

விரைவு நடவடிக்கை படகுகள் படையின் 25 வது தகுதிப் பெறும் பாடநெறியை முடித்த ஒரு அதிகாரி மற்றும் 36 மாலுமிகளுக்கான சின்னங்கள் அணிவிக்கும் விழா 2021 மார்ச் 10 ஆம் திகதி புத்தலம் கங்கேவாடிய விரைவு நடவடிக்கை படகுகள் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன் விரைவு நடவடிக்கை படகுகள் படையின் கட்டளை அதிகாரி கொமாண்டர் சாகர உதயங்கவின் அழைப்பின் பேரில் வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.பி.சேனரத்ன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கழந்துகொண்டார்.

11 Mar 2021

கடற்படை வண்ண விருதுகள் - 2021 பிரம்மாண்டமாக நடைபெற்றது

இலங்கை கடற்படை விளையாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை வண்ண விருதுகள் – 2021 நிகழ்வு இன்று (2021 மார்ச் 09) கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவர் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் அத்திடிய ஈகள்ஸ் லேக்ஸைட் விழா மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

09 Mar 2021

கடற்படை சேவா வனிதா பிரிவு சர்வதேச மகளிர் தினத்தை பிரமாண்டமாக கொண்டாடியது

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் மகளிர் தின கொண்டாட்டத் திட்டமொன்று பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்களிப்பில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெற்றது.

09 Mar 2021

கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்தஹிரு சேய மற்றும் மிஹிந்து மகா சேயவின் கட்டுமான மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்

பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுடன் 2021 மார்ச் 06 அன்று அனுராதபுரம் சந்தஹிரு சேயவின் நிர்மாணப்பணிகளை ஆய்வு செய்து, மிஹிந்தலை மிஹிந்து மகா சேயவின் மறுசீரமைப்பு பணிகளை தொடங்கும் நிகழ்வுக்காக கழந்து கொண்டார்.

07 Mar 2021

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை, இந்திய கடற்படையுடன் இணைந்து வான்வழி கண்காணிப்பு பயிற்சியொன்றை மேற்கொண்டுள்ளது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை, இந்திய கடற்படையின் டோர்னியர் விமானமொன்று (Dornier Aircraft) மூலம் வான்வழி கண்காணிப்பு பயிற்சி நடவடிக்கையொன்று இலங்கையின் தென் கடல் பகுதியில் 2021 மார்ச் 02 முதல் 05 வரை நடத்தியது.

06 Mar 2021

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவினால் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘சவால் செய்ய தேர்வு செய்வோம்’ என்ற தலைப்பில் இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவு மகளிர் தின கொண்டாட்டத் திட்டத்தையும் 'சிந்துலிய' என்ற இதழின் வெளியீடு விழாவும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

06 Mar 2021