நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2021 நவம்பர் 09) கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

09 Nov 2021

கடற்படையின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட தம்புள்ளை வீர மொஹான் ஜயமஹ கல்லூரியின் வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடற்படையின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட மத்திய மாகாணத்தின் தம்புள்ளை, கலேவெல வீர மோகன் ஜயமஹா மகா வித்தியாலயத்தின் வசதிகள் 2021 நவம்பர் 05 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

06 Nov 2021

பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு 9 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கை கடற்படையால் பராமரிக்கப்படுகின்ற பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தின் பயன்பாட்டிற்காக தேவையான ரூ. 9 மில்லியன் மதிப்புள்ள அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் சிட்டிசன்ஸ் டெவலப்மெண்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் தனியார் நிருவனத்தால் (Citizens Development Business Finance PLC) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் அடையாளமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (2021 நவம்பர் 05) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக்க திசாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

05 Nov 2021

ரியர் அட்மிரல் அசோக விஜேசிறிவர்தன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் அசோக விஜேசிறிவர்தன இன்று (2021 நவம்பர் 19) ஓய்வு பெற்றார்.

05 Nov 2021

இரண்டு புதிய இலங்கை சாதனைகளைப் படைத்த கயந்திகா அபேரத்னவுக்கு கடற்படைத் தளபதியினால் பதவி உயர்வு

மகளிருக்கான 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் தடகளப் போட்டிகளில் இரண்டு புதிய இலங்கை சாதனைகளைப் படைத்து இலங்கை கடற்படைக்கு பெரும் புகழைக் கொண்டு வந்த கடற்படை வீராங்கனி கயன்திகா அபேரத்னவுக்கு கடற்படைத் தளபதியினால் இன்று (நவம்பர் 21) பதவி உயர்வு வழங்கப்பட்டன.

02 Nov 2021

பானமவில் கடற்படையினரால் நீர் சறுக்கல் விளையாட்டு கிளப் திறந்து வைப்பு

இலங்கை கடற்படை அண்மையில் பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்ட கிளப்பை நிறுவியுள்ளது. பானம கடற்கரையில் நிறுவப்பட்ட இந்த புதிய வசதிகள், தென்கிழக்கு கடற்படைப் பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கமகேவினால் இம்மாதம் 25ம் திகதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

27 Oct 2021

வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் ஸ்தாபிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 25) பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

25 Oct 2021

இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியினை தொடங்குகிறது

இந்திய கடற்படையைச் சேர்ந்த 01வது பயிற்சிப் படைக் கப்பல்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியினை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் (ஒக்டோபர்,24) இலங்கை வந்தடைந்தன.

24 Oct 2021

இலங்கை கடற்படை கப்பல் 'சமுதுர' எச்எம்எஸ் 'கென்ட்' கப்பலுடன் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பு

எரிபொருள் நிரப்பும் தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த ரோயல் கடற்படை படைக்குச் சொந்தமான வகை 23 ரக ஹேர் மெஜஸ்டிஸ் 'கென்ட்' போர்க்கப்பல், இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட பயிற்சிகளின் பின்னர் நேற்றைய தினம் (ஒக்டோபர் 24) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

24 Oct 2021

யாழில் உள்ள சதுப்புநில பகுதியில் கடற்படையினரால் 5,000 கண்டல் தாவரங்கள் நடுகை

யாழ் குடாநாட்டில் 5,000 கண்டல் தாவரங்களை நடுகை செய்ய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டம் அண்மையில் பொன்னாலை சதுப்புநிலப் பகுதியில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

19 Oct 2021