நிகழ்வு-செய்தி

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான ககா, முரசமே மற்றும் பியுசுகி ஆகிய 3 நாசகாரி கப்பல்கள் இன்றைய தினம் (ஒக்டோபர் 02) நாட்டிற்கு வருகை தந்துள்ளன. இதற்கமைய, ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான குறித்த கப்பல்கள் நல்லெண்ணெ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்த அடைந்துள்ளது.

02 Oct 2021

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் பற்றிய பாடநெறிகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை நடத்தும் கடற்படையினர்களுக்கு திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பாடநெறிகளின் (Counter Narcotics Boarding Officer Course/ Advanced Boarding Officer Course) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2021 செப்டம்பர் 22 அன்று கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ்வின் தலைமையில் திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

25 Sep 2021

மன்னார் பள்ளேமுனை கடற்படை முகாமில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை திறக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற, மன்னார் பள்ளேமுனை கடற்படை முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சிறிய படகுகள் நிருத்துவதுக்கான படகுத்துறை 2021 செப்டம்பர் 23 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

24 Sep 2021

இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் அலெக்ஸி ஏ. பொன்டரேவ் (Aleksei A.Bondarev) இன்று (2021 செப்டம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

23 Sep 2021

இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வர்ட் ஆபள்டன் அவர்கள் (Michael Edward Appleton) இன்று (2021 செப்டம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவை சந்தித்தார்.

23 Sep 2021

பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ‘சுடு நீர் ஆவியாதல்’ உபகரணங்கள் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகேவிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2021 செப்டம்பர் 17 ஆம் திகதி காலி பிஷப் ரேமன் விக்ரமசிங்கவின் தலைமையில் காலி கலுவெல்ல தேவாலயத்தில் இடம்பெற்றது.

21 Sep 2021

அமெரிக்காவில் நடைபெற்ற 24 வது சர்வதேச கடல்சார் ஆதிக்கம் மாநாட்டில் கலந்து கொண்ட கடற்படை தளபதி தாய்நாட்டிற்கு வந்துள்ளார்

அமெரிக்காவின் ரோட் தீவு பிராந்தியத்தில் நியூபோர்ட் நகரத்தில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில், 2021 செப்டம்பர் 14 முதல் 17 வரை நடைபெற்ற அமெரிக்க கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கடல்சார் ஆதிக்கம் மாநாட்டில் (International Seapower Symposium) 24 வது அமர்வுக்காக இலங்கை கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.

20 Sep 2021

மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியில் இலங்கை கடற்படையின் அனுசரணையுடன் கட்டப்பட்ட பாடசாலை கட்டிடம் கல்லூரி மானவர்களிடம் கையளிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் இன்று (2021 ஆகஸ்ட் 01) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

01 Aug 2021

ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன 2021 ஜூலை 20 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

20 Jul 2021

இலங்கை கடற்படையால் புதிய சுழியோடுதல் சாதனை

நீருக்கடியில் சுழியோடுதல் செய்வது ஒரு அற்புதமான அனுபவம் என்றாலும், சுழியோடுதல் ஒரு ஆபத்தான முயற்சியாகும். இந்த அபாயங்களுக்கு சவாலாக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் யானை தீவுக்கு அருகில் ஆழ்கடலில் 100 மீட்டர் ஆழத்துக்கு சுழியோடி 2021 ஜூலை 17 ஆம் திகதி கட்டளை சுழியோடி அதிகாரி (கிழக்கு கடற்படை கட்டளை) கொமாண்டர் நிஷாந்த பாலசூரிய மற்றும் அவரது உதவியாலர் கடற்படை வீரர் (சுழியோடி) டப்டப்என்பி சந்தருவன் ஆகியோர் புதிய சாதனையொன்றை படைத்தனர். கடற்படை வரலாற்றில் இத்தகைய ஆழத்துக்கு சுழியோடிய முதல் நபர்களாக இவர்கள் வரலாற்றுக்கு சேர்ந்தனர்.

19 Jul 2021