நிகழ்வு-செய்தி

சர்வதேச பயணிகள் கப்பலான MSC Magnifica கப்பலில் இருந்த ஒரு ஜெர்மன் பெண் கரைக்கு அழத்து வர கடற்படை உதவி

சர்வதேச பயணிகள் கப்பலான MSC Magnifica கப்பலில் பணியாற்றிய ஒரு இலங்கையர் தன்னை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருமாறு சமூக ஊடகங்கள் மூலம் கோரியிருந்தார், அதன்படி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஒப்புதலின் கீழ் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் கடற்படை இன்று (ஏப்ரல் 06, 2020) குறித்த இலங்கையரை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது.

06 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மற்றொரு குழு வெளியேறல்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த மற்றொரு குழுவினர் இன்று (2020 ஏப்ரல் 06) தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டனர்.

06 Apr 2020

இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த மேலும் ஒரு இரத்த தான திட்டம் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது

ஹம்பாந்தோட்டை கடற்படை முகாம் மற்றும் ஹம்பாந்தோட்டை இரத்த மாற்றம் திணைக்களம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட மேலும் ஒரு இரத்த தான திட்டம் 2020 ஏப்ரல் 05 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனை வளாகத்தில் கடற்படை பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

06 Apr 2020

வீட்டிலேயே தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்காக கடற்படை மேற்கொண்டுள்ள பொழுதுபோக்கு திட்டம்

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அரசாங்கத்தால் பெயரிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படை 2020 ஏப்ரல் 05 அன்று கொழும்பு பகுதியில் உள்ள மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியது.

06 Apr 2020

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 03 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, றாகம, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை மற்றும் கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள வங்கி வளாகங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

05 Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மேலும் இருவர் கடற்படையினரால் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய இரண்டு பேர் (02) 2020 ஏப்ரல் 04 அன்று ஆருகம்பை முஹுது மகா விஹாரய சந்திக்கு அருகே அமைக்கப்பட்ட சாலைத் தடையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

05 Apr 2020

நெடுந்தீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல மற்றும் விநியோகிக்க கடற்படை ஆதரவு

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல மற்றும் விநியோகிக்க இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 03 ஆம் திகதி தனது பங்களிப்பை வழங்கியது.

04 Apr 2020

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் மற்றொரு சமூக சேவை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ‘மிதுரு மிதுரோ’ மறுவாழ்வு மையத்தின் நபர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கும் ஒரு திட்டத்தை இன்று (2020 ஏப்ரல் 04,) இலங்கை கடற்படை தனது சமூக நலத் திட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளது.

04 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த இரண்டாவது குழு புறப்பட்டது

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த இரண்டாவது குழுவினர் இன்று (2020 ஏப்ரல் 03) தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டனர்.

03 Apr 2020

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கடற்படை பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை நடத்திய திட்டங்களின் விரிவாக்கமாக, றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் கடந்த சில நாட்களில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

03 Apr 2020