வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள உணவகங்கள் சேவா வனிதா பிரிவின் கீழ் மறுவடிவமைப்பில் திறந்து வைப்பு

வெலிசர கடற்படை வளாகத்தில் இணைக்கப்பட்ட கடற்படையினர், கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை வளாகத்திக்கு வருகை தரும் கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் வெலிசர கடற்படை வளாகத்தில் மற்றும் கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள சேவா வனிதா உணவகங்கள் (Cafeteria) மறுவடிவமைப்பு செய்து 2021 ஜனவரி 25 அன்று கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
26 Jan 2021
இரு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்கள் திறந்து வைப்பு மற்றும் சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலைமொன்றுக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிழக்கு கடற்படைக் கட்டளையில் இடம்பெற்றது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்துப்படி கடற்படை ஊழியர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிருவனங்களில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்கள் திறந்து வைப்பு மற்றும் வலகம்பா நிருவனத்தில் சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலைமொன்றுக்காக அடிக்கல் நாட்டுதல், 2021 ஜனவரி 24 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிறுவன வளாகங்களில் இடம்பெற்றது.
26 Jan 2021
இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட சேவா வனிதா அபான்ஸ் நிலையம் திறக்கப்பட்டது

இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட இலங்கை கடற்படை சேவா வனிதா அபான்ஸ் நிலையம் 2021 ஜனவரி 09 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்களிப்புடன் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன திறந்து வைத்தார்.
12 Jan 2021
சேவா வனிதா பிரிவின் மூத்த உறுப்பினர்களுடைய பிரியாவிடை வைபவம்

கடற்படை சேவா வனிதா பிரிவின் 05 மூத்த உறுப்பினர்களுக்கான பிரியாவிடை விருந்து இன்று (2020 ஜனவரி 11) கடற்படை தலைமையகத்தில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் நடைபெற்றது.
12 Jan 2021
கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி வட மத்திய கடற்படை கட்டளையின் சேவா வனிதா திட்டங்களை பார்வையிட்டார்.

2020 டிசம்பர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் வடமத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்த கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கட்டளையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவா வனிதா திட்டங்களை ஆய்வு செய்தார்.
28 Dec 2020
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சித்ராணி குணரத்ன அவர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படை சேவா வனிதா திட்டங்களை பார்வையிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சித்ராணி குணரத்ன அவர்கள், 2020 டிசம்பர் 12 அன்று திருகோணமலை இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ நிறுவனத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கடற்படை சேவா வனிதா திட்டங்களை பார்வையிட்டார்.
17 Dec 2020
கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

சேவா வனிதா பிரிவின் மேலும் ஒரு சமூக சேவையாக, சேவா வனிதா பிரிவின் தளபதியான திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துப்படி, 2020 நவம்பர் 25 ஆம் திகதி கடற்படையில் பணியாற்றும் எச்.எம்.பி குணவர்தனவின் இ.டி 106471 நோய்வாய்ப்பட்ட சகோதரிக்கு மின்சார சக்கர நாற்காலியொன்றை நன்கொடையாக வழங்கப்பட்டது. இந் நிகழ்வு 2020 நவம்பர் 25 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
26 Nov 2020
வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள கடற்படை திருமன இல்லங்களுக்கு சேவா வனிதா பிரிவு மூலம் தினசரி நுகர்வோர் பொருட்களை வழங்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதியான திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி, வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள கடற்படை திருமண இல்லங்களில் வசிக்கும் கடற்படை குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு அன்றாட தேவைகளை வழங்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
20 Nov 2020
இரு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் கிழக்கு கடற்படைக் கட்டளையில் இடம்பெற்றது

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிருவனங்களில் கட்டப்படவுள்ள இரண்டு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 2020 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.
08 Nov 2020
புதிய சேவா வனிதா யோகட் திட்டக் கட்டடத்தைத் திறந்து வைப்பு மற்றும் ஒரு புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வடமேற்கு கடற்படைக் கட்டளையில் இடம்பெற்றது

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் கட்டப்பட்ட புதிய சேவா வனிதா யோகட் திட்டக் கட்டடத்தைத் திறந்து வைப்பு மற்றும் தம்பபண்ணி நிருவனத்தில் புதிய சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலையத்திற்கும் யோகட் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்ன தலைமையில் 2020 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பரன மற்றும் தம்பப்பன்னி நிருவன வளாகங்களில் இடம்பெற்றது.
31 Oct 2020