விளையாட்டு செய்திகள்
கிளிபர்ட் கிண்ணம் ஆண்கள் ரக்பி போட்டித்தொடரில் இரண்டாம் இடம் கடற்படை பெற்றுள்ளது

கிளிபர்ட் கிண்ணம் ஆண்கள் ரக்பி போட்டித்தொடரில் இறுதிப்போட்டி 2023 மார்ச் மாதம் 05 ஆம் திகதி கடற்படை மற்றும் CR&FC அணிகளுக்கு இடையில் கொழும்பு குதிரைபந்தய மைதானத்தில் நடைபெற்றதுடன் அங்கு 24-18 என்ற கணக்கில் கடற்படை ரக்பி அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
07 Mar 2023
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை கடற்படை கைப்பற்றியது

கொழும்பில் நடைபெற்ற தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை கடற்படை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடற்படையின் ஆடவர் மல்யுத்த அணி தொடர்ச்சியாக 20வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
21 Feb 2023
கட்டளைகளுக்குக் இடையேயான தடகள போட்டித்தொடர் – 2023 இன் மரதன் ஓட்டப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்த ஆண்டுக்கான கட்டளைகளுக்குக் இடையேயான தடகள போட்டித்தொடர் – 2023 பிப்ரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படைக் கட்டளையில் நடைபெற உள்ளதுடன் அதன் மரதன் ஓட்டப் போட்டி 2023 பிப்ரவரி 06 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
07 Feb 2023
2023 – நிப்போன் பத்து உறுப்பினர்கள் கொண்ட மகளிர் ரக்பி போட்டித்தொடரில் CR&FCக்கு எதிரான போட்டியில் கடற்படை மகளிர் அணி வெற்றி பெற்றது

2023 ஜனவரி 22 ஆம் திகதி கொழும்பு லொங்டன் பிளேஸில் நடைபெற்ற 2023 – நிப்போன் பத்து உறுப்பினர்கள் கொண்ட மகளிர் ரக்பி போட்டித்தொடரில் CR&FC மகளிர் ரக்பி அணிக்கு எதிரான போட்டியில் கடற்படை மகளிர் ரக்பி அணி 30-05 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
23 Jan 2023
‘DHAKA MARATHON - 2023’ இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனி சுஜானி மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

2023 ஜனவரி 20 ஆம் திகதி பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 42 கிலோ மீட்டர் மற்றும் 195 மீட்டர் தூர ‘DHAKA MARATHON - 2023’ மகளிர் மராத்தான் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனி சுஜானி மதுமாலி பெரேரா குறித்த போட்டியை 02 மணி 48 நிமிடம் 22 வினாடிகளில் முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், இலங்கை கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெரும் புகழைக் கொண்டு வந்தார்.
22 Jan 2023
“Dr Nihal Jinasena Memorial Cup annual Sailing Regatta - 2022” பாய்மரப் படகுப் போட்டித்தொடரில் கடற்படை விளையாட்டு வீரர்களுக்கு பல வெற்றிகள்

“Dr Nihal Jinasena Memorial Cup annual Sailing Regatta - 2022” பாய்மரப் படகுப் போட்டித்தொடர் 2022 டிசம்பர் 03 ஆம் திகதி வெலிகம, மிரிஸ்ஸ கப்பரதொட கடற்கரையில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் கடற்படை பாய்மரக் குழு பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.
05 Dec 2022
பாதுகாப்பு சேவை கைப்பந்து ஆண்கள் சாம்பியன்ஷிப்பை இலங்கை கடற்படை வெற்றி பெற்றது

பன்னிரண்டாவது (12) பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடரில் - 2022/23, பாதுகாப்பு சேவை கைப்பந்து போட்டிகள் 2022 நவம்பர் 09, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மினுவாங்கொடை ‘Airport Sports Complex’ யில் நடைபெற்றதுடன் அங்கு கடற்படை ஆண்கள் கைப்பந்து அணி பாதுகாப்பு சேவை கைப்பந்து சாம்பியன்ஷிப்பை வெற்றி பெற்றது.
12 Nov 2022
12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது

12வது பாதுகாப்பு சேவைகள் கயிறு இழுத்தல் போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் கட்டுநாயக்க இலங்கை விமானப்படை மைதானத்தில் நடைபெற்றதுடன் இங்கு இலங்கை கடற்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கயிறு இழுத்தல் அணிகள் இராணுவ அணிகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றன.
29 Oct 2022
12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடர் ஆரம்பமானது

12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்னவின் தலைமையில் 2022 ஒக்டோபர் 19 ஆம் திகதி பனாகொட இராணுவ முகாமின் புதிய உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.
20 Oct 2022
08வது கெரம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கடற்படை வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

சர்வதேச கெரம் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த (08th Carrom World Championship -2022) போட்டித்தொடர் 2022 அக்டோபர் 03 முதல் 07 வரை மலேசியாவின் லங்காவியில் நடைபெற்றதுடன் இப் போட்டித்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபெற்ற கடற்படை வீரர் நிஷாந்த பெர்னாண்டோ மற்றும் கடற்படை வீராங்கணி ஜோசப் ரோஷிடா ஆகியோர் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
11 Oct 2022