நிகழ்வு-செய்தி

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலொன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான Arleigh Burke-Class Destroyer வகையின் போர்க்கப்பலான USS FITZGERALD (DDG 62) கப்பல் இன்று (2022 மார்ச் 13) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பலை வரவேற்கப்பட்டது.

13 Mar 2022

இந்திய கடற்படை கப்பல்கள் தீவை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 மார்ச் 10 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் மேற்கு கப்பல்கள் குழுவின் கொடி கப்பலான Destroyer வகையின் ‘INS Chennai ’ மற்றும் இந்திய கடற்படையின் Frigate வகையின் போர் கப்பலான ‘INS Teg’என்ற கப்பல்கள் இன்று (2022 மார்ச் 12) தீவை விட்டு புறப்பட்டுள்ளது.

12 Mar 2022

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களின் பங்குபற்றலுடன் நிறைவடைந்தது

கத்தோலிக்கர்கள் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் பூஜை வழிபாடுகள் நடத்துகின்ற இந்திய - இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா இன்று (2022 மார்ச் 12) வெற்றிகரமான குறிப்பில் நிறைவடைந்தது. அதன்படி குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இம்முறை திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான வசதிகள் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டன.

12 Mar 2022

ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன இன்று (2022 மார்ச் 11) ஓய்வு பெற்றார்.

11 Mar 2022

இந்திய மேற்கு கடற்படைக் கப்பல்கள் குழுவின் கட்டளை கொடி அதிகாரி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இந்திய கடற்படையின் மேற்கு கப்பல்கள் குழுவின் கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா (Rear Admiral Sameer Saxena, Flag Officer Commanding Western Fleet Indian Navy) இன்று (2022 மார்ச் 10) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

10 Mar 2022

பிரெஞ்சு, பங்களாதேஷ் மற்றும் இந்திய கடற்படைகளின் போர்க்கப்பல்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வந்தடைந்தன

பிரெஞ்சு, பங்களாதேஷ் மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான நான்கு போர்க்கப்பல்கள் 2022 மார்ச் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு வந்தடைந்துள்ளதுடன் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பல்களை வரவேற்கப்பட்டன.

10 Mar 2022

ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் இன்று (2022 மார்ச் 09) ஓய்வு பெற்றார்.

09 Mar 2022

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன இன்று (2022 மார்ச் 08) திருகோணமலையில் உள்ள கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

08 Mar 2022

வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்.

வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க இன்று (2022 மார்ச் 08) தலைமன்னாரில் உள்ள கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

08 Mar 2022

மரைன் படைப் பிரிவுடன் இனைந்து பயிற்சியை நிரைவு செய்த கடற்படை வீரர்களுக்கு சின்னங்கள் அணிவிப்பு கடற்படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றது.

மரைன் படைப் பிரிவுடன் இனைந்து வெற்றிகரமாக பயிற்சியை நிரைவு செய்த 07 வது ஆட்சேர்ப்பின் 04 அதிகாரிகள் மற்றும் 22 மாலுமிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் 2022 மார்ச் 04 ஆம் திகதி சின்னங்கள் அணிவிக்கப்பட்டது. கடற்படைத் தளபதியின் தலைமையில் திருகோணமலை, சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.

05 Mar 2022