நிகழ்வு-செய்தி

மான் இறைச்சி கொண்ட ஒரு நபர் (01) கைது செய்ய கடற்டை உதவி

கடற்படை மற்றும் மன்னார் ஊழல் தடுப்புப் பிரிவு இனைந்து 2020 ஏப்ரல் 24 ஆம் திகதி துனுக்காய், இலுப்பைகட்டவாய் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மான் இறைச்சி கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

25 Apr 2020

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கடற்படையால் முகமூடிகள் வழங்கப்பட்டன

அனுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களின் பயன்பாட்டிற்காக பல பாதுகாப்பு முகமூடிகள் 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி, கடற்படையால் வைத்தியசாலையில் மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.

24 Apr 2020

சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்கள் மக்கள் சீனக் குடியரசு மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்கள் இன்று (2020 ஏப்ரல் 22) கடற்படை தலைமையகத்தில் வைத்து மக்கள் சீனக் குடியரசு மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

24 Apr 2020

ஊடக அறிக்கை

விடுமுறையில் இருந்தபோது பொலன்னறுவையைச் சேர்ந்த ஒரு கடற்படை வீரர் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிசெய்த பின்னர், பாதிக்கப்பட்டவருடன் அலுவலகத்தில் பணிபுரிந்த வெளிசர கடற்படை தளத்தில் உள்ள ஏனைய கடற்படை வீரர்களுக்கும் தொற்று பரவியுள்ளது தொடர்பாக கண்டறிய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

24 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 03 நபர்கள் புறப்பட்டு சென்றனர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 03 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 24) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

24 Apr 2020

49 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உள்ளூர் கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 ஏப்ரல் 23 அன்று தனமல்வில உஸ்ஸல்ல மற்றும் குடாவெவ பகுதிகளில் ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர், அப்போது 49 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உள்ளூர் கஞ்சா கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

24 Apr 2020

சதுப்புநில தாவரங்கள் வெட்டிய மூன்று நபர்கள் (03) கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 23 ஆம் திகதி மன்னார் திருகேதிஸ்வரம் களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது சதுப்புநில தாவரங்கள் வெட்டிய மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

24 Apr 2020

தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 23 ஆம் திகதி மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 11 தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

24 Apr 2020

சட்டவிரோத மதுபானங்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி புத்தலம் சேதபொல பகுதியில் நடத்திய ரோந்து நடவடிக்கையின் மற்றும் 2020 ஏப்ரல் 22 மற்றும் 23 திகதிகளில் வெண்ணப்புவ பகுதியில் நடத்திய சிறப்பு தேடல் நடவடிக்கையின், சட்டவிரோத மதுபானங்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த மூன்று இடங்கள் சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோத உள்நாட்டு மதுபானம், கோடா மற்றும் மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுத்திய பிற உபகரணங்களுடன் நாங்கு (04) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

23 Apr 2020

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 21 மற்றும் 22 திகதிகளில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகம், தேர்தல் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் ஆணையம், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பகுதியில் உள்ள வங்கிகள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

23 Apr 2020