நிகழ்வு-செய்தி

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட இலங்கையின் மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆதரவுடன் மீண்டும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

28 May 2020

தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

திருகோணமலை கோவில்கொடிஇருப்பு மற்றும் கதிரவேலி பாலச்சேனை கடற்கரைகளில் 2020 மே 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் மேற்கொண்டுள்ள இரண்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த கடற்கரைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல சட்டவிரோத வலைகளை கடற்படை கைப்பற்றியது.

28 May 2020

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மஹோகனி மரக் கட்டைகளை கொண்டு சென்ற கேப் வண்டியுடன் இரண்டு நபர்கள் (02) கைது

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மஹோகனி மரக் கட்டைகளை கொண்டு சென்ற ஒரு கேப் வண்டி மற்றும் இரண்டு நபர்கள் யாழ்ப்பாணம் பொன்னலை சந்திக்கு அருகிலுள்ள சாலைத் தடையில் வைத்து 2020 மே 26 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

28 May 2020

காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் கடற்படையினரால் 2020 மே 27 ஆம் திகதி அகற்றப்பட்டன.

27 May 2020

கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து நான்கு நபர்கள் (04) வெளியேறினர்

கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நான்கு (04) நபர்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும், இன்று (2020 மே 27) குறித்த மையத்தை விட்டு வெளியேறினர்.

27 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 12 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 344 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 12 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 26 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

27 May 2020

அம்பலங்கொடை பிரதான வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

அம்பலங்கொடை பிரதான வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 மே 26) கடற்படையினர் மற்றும் காலி தீயணைப்பு படையணி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

26 May 2020

மேலும் ஆறு நபர்கள் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்

கற்பிட்டி பகுதியில் உள்ள இரண்டு கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு (06) நபர்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும், 2020 மே 25 ஆம் திகதி மையங்களை விட்டு வெளியேறினர்.

26 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 19 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 19 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 25 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

26 May 2020

பாதிக்கப்பட்ட மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் மேலும் வழங்கப்படுகிறது

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் இப்போது இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆதரவுடன் மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றன. இவ்வாரு வருகின்ற குறித்த மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான உணவு, நீர், மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் மேலும் வழங்கப்படுகின்றன.

25 May 2020