நிகழ்வு-செய்தி

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் கடற்படை வீரர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக முதலில் அடையாளம் காணப்பட்ட பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் உட்பட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 05 கடற்படை வீரர்கள் பி.சி.ஆர் சோதனையின் பின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

09 May 2020

வெசாக் தினத்தை (07) முன்னிட்டு கடற்படை முகாம்களில் விசேட பௌத்த மத வழிப்பாட்டு பிரார்த்தனைகள் இடம்பெற்றன

புத்தரின் மகத்தான வாழ்கையை நினைவு கூரும் வெசாக் தினத்தை (07) முன்னிட்டு கடற்படை முகாம்களில் விசேட பௌத்த மத வழிப்பாட்டு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மேலும் உலகம் முழுவதும் பரவி வரும் கோவிட் -19 வைரஸ் தொற்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்கள் உட்பட அனைத்து இலங்கையர்கள் மற்றும் முழு உலக மக்களுக்கும் விரைவாக குணமடைய இங்கு மத பிராத்தனைகளும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.

08 May 2020

கோவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 16 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 02 கடற்படை வீரர்கள் 2020 மே 7 அன்று நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.

08 May 2020

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

கடற்படையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் சாம்பூர் (98) ஒலுவில் (20) தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 நபர்கள் இன்று 2020 மே 08 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

08 May 2020

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை துறைமுகத்திற்கு வெளி கடல் பகுதியில் 2020 மே 07 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

08 May 2020

மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 02 கடற்படை வீரர்கள் பி.சி.ஆர் சோதனையின் பின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் இன்று (2020 மே 07) வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.

07 May 2020

வெலிசர கடற்படை தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 08 கடற்படை வீரர்கள் பூரண குணம்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

07 May 2020

நீர்மூழ்கி உபகரணங்களுடன் இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

2020 மே 06 ஆம் திகதி வலைப்பாடு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆழமற்ற நீரில் கட்டப்பட்ட ஒரு தற்காலிக குடிசையில்,அனுமதி பத்திரங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி உபகரணங்களுடன் இரண்டு நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

07 May 2020

Women to Women அமைப்பு மற்றும் ‘மனுசத் தெரன’ திட்டத்தால் கடற்படைக்கு மற்றொரு நன்கொடை

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான மெத்தைகள், தலையணைகள் மற்றும் படுக்கை துணிகள் 2020 மே 06 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் வைத்து Women to Women அமைப்பு மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

07 May 2020

‘தெல்வு பஹன்’ சமூக நல அமைப்பு மூலம் கடற்படைக்கு சுகாதார ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகள் (PPE) ‘தெல்வு பஹன்’ சமூக நல அமைப்பு மூலம் 2020 மே 06 ஆம் திகதி கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

07 May 2020