நிகழ்வு-செய்தி

கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

தெற்கு மாகாணத்தில் காலி, நெலுவ, லங்காகம மற்றும் நில்வெல்ல கிராமங்களை இணைக்கும் கடற்படையின் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம் தெற்கு மாகாண ஆளுநர் கலாநிதி சிலி கமகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னயின் பங்கேற்புடன் 2021 ஏப்ரல் 10 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

11 Apr 2021

நில்வெல்ல நீருக்கடியில் கலைக்கூடம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நில்வெல்ல கடற்கரை இலங்கையின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு அழகான கடற்கரையாகும், குறித்த அழகான கடற்கரையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்ட நில்வெல்ல நீருக்கடியில் கலைக்கூடம் (Underwater Gallery Nilwella) இன்று (2021 ஏப்ரல் 10) கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு நாமல் ராஜபக்‌ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

10 Apr 2021

ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய இன்று (2021 ஏப்ரல் 09) ஓய்வு பெற்றார்.

09 Apr 2021

72 கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையில் பணி யாற்றும் 43 மூத்த கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மற்றும் 29 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2021 ஏப்ரல் 07) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

07 Apr 2021

கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு 2021 ஏப்ரல் 05 ஆம் திகதி விஜயம் செய்தார். இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

06 Apr 2021

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2021 ஏப்ரல் 03 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் இணைந்துள்ளார்.

05 Apr 2021

நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தில் நிர்மானிக்கப்பட்ட பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு ஓய்வு இல்லம் கடற்படை தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் பங்களிப்புடன் நயினாதீவு பண்டைய ராஜமஹா விஹாராயத்தில் கட்டப்பட்ட பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு மூன்று மாடி ஓய்வு இல்லத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2021.ஏப்ரல் 03) திறந்து வைத்தார். இந் நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கழந்துகொண்டார்.

03 Apr 2021

ஹிம்புடான ஸ்ரீ அபினவாராம விஹாரயத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய 'தாது மந்திரய' கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையினரால் ஹிம்புடான ஸ்ரீ அபினவாராம விஹாரயத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய 'தாது மந்திரய' இன்று (2021 ஏப்ரல் 02) கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.

02 Apr 2021

ஹன்வெல்ல, நிரிபொல ரோமன் கத்தோலிக்க முதன்மை கல்லூரியின் புதுப்பிக்கும் நடவடிக்கைகளுக்காக கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, கடற்படை பங்களிப்புடன் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் மிரான் சல்காதுவின் நிதி உதவியுடன், ஹன்வெல்ல, நிரிபொல ரோமன் கத்தோலிக்க முதன்மை கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மைதானமொன்று மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிற இடங்கள் மார்ச் 29 அன்று திறந்துவைக்கப்பட்டது.

01 Apr 2021

ஹரித டிவி தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கும் விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

கொழும்பு, ஹுனுப்பிட்டிய – கங்காராம விகாரையில் இயங்கும் ஶ்ரீ ஜினரத்ன கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி அலைவரிசையின் தொடக்க ஒளிபரப்பு இன்று (2021 மார்ச் 31) அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

31 Mar 2021