நிகழ்வு-செய்தி
இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கையில் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வர்ட் ஆபள்டன் அவர்கள் (Michael Edward Appleton) இன்று (2021 செப்டம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவை சந்தித்தார்.
23 Sep 2021
பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ‘சுடு நீர் ஆவியாதல்’ உபகரணங்கள் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகேவிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2021 செப்டம்பர் 17 ஆம் திகதி காலி பிஷப் ரேமன் விக்ரமசிங்கவின் தலைமையில் காலி கலுவெல்ல தேவாலயத்தில் இடம்பெற்றது.
21 Sep 2021
அமெரிக்காவில் நடைபெற்ற 24 வது சர்வதேச கடல்சார் ஆதிக்கம் மாநாட்டில் கலந்து கொண்ட கடற்படை தளபதி தாய்நாட்டிற்கு வந்துள்ளார்
அமெரிக்காவின் ரோட் தீவு பிராந்தியத்தில் நியூபோர்ட் நகரத்தில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில், 2021 செப்டம்பர் 14 முதல் 17 வரை நடைபெற்ற அமெரிக்க கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கடல்சார் ஆதிக்கம் மாநாட்டில் (International Seapower Symposium) 24 வது அமர்வுக்காக இலங்கை கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.
20 Sep 2021
மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியில் இலங்கை கடற்படையின் அனுசரணையுடன் கட்டப்பட்ட பாடசாலை கட்டிடம் கல்லூரி மானவர்களிடம் கையளிக்கப்பட்டது
யாழ்ப்பாணம் மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் இன்று (2021 ஆகஸ்ட் 01) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
01 Aug 2021
ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்
வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன 2021 ஜூலை 20 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
20 Jul 2021
இலங்கை கடற்படையால் புதிய சுழியோடுதல் சாதனை
நீருக்கடியில் சுழியோடுதல் செய்வது ஒரு அற்புதமான அனுபவம் என்றாலும், சுழியோடுதல் ஒரு ஆபத்தான முயற்சியாகும். இந்த அபாயங்களுக்கு சவாலாக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் யானை தீவுக்கு அருகில் ஆழ்கடலில் 100 மீட்டர் ஆழத்துக்கு சுழியோடி 2021 ஜூலை 17 ஆம் திகதி கட்டளை சுழியோடி அதிகாரி (கிழக்கு கடற்படை கட்டளை) கொமாண்டர் நிஷாந்த பாலசூரிய மற்றும் அவரது உதவியாலர் கடற்படை வீரர் (சுழியோடி) டப்டப்என்பி சந்தருவன் ஆகியோர் புதிய சாதனையொன்றை படைத்தனர். கடற்படை வரலாற்றில் இத்தகைய ஆழத்துக்கு சுழியோடிய முதல் நபர்களாக இவர்கள் வரலாற்றுக்கு சேர்ந்தனர்.
19 Jul 2021
கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரயவில் திறந்து வைக்கப்பட்டது
கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக, வட மத்திய மாகாணத்தின் துணைத் தலைமைத் தலைவரான புனிதபாத பன்வில குனரத்ன நாயக்க தேரரின் வேண்டுகோளின் படி, பண்டுகலம சிரி சம்புத்த விஹாரயவுக்கு இணைந்த ரொடவெவ,எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரய வளாகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவியால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2021 ஜூலை 17 அன்று திறந்து வைக்கப்பட்டன.
19 Jul 2021
ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்
வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன 2021 ஜூலை 16 ஆம் திகதி வட மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
17 Jul 2021
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற கடற்படை வீராங்கனைக்கு தர உயர்வு
பெண்கள் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 போட்டி மூலம் இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்று இலங்கை கடற்படைக்கும் நாட்டிற்கும் மகத்தான புகழ் கொண்டு வந்த இலங்கை கடற்படையில் பணியாற்றும் பெண் மாலுமியான டெஹானி எகொடவெலவுக்கு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவினால் ரூ. 250,000.00 பெறுமதிவாய்ந்த நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
16 Jul 2021
வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் வெற்றிகரமாக நிறைவு
வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் ஜூலை 13 முதல் 15 வரை இடம்பெற்றது, நேற்றைய தின (ஜூலை 15) நிகழ்வினை குறிக்கும் வகையில் திரைநீக்கம் செய்யப்பட்டது. கடற்படை அதிகாரிகளின் பிரதி பிரதானியும் தற்போதையவட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் தலைவருமான ரியர் அட்மிரல் வை என் ஜயரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தொடர்தேசிய நீரியல் வள ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமாரி முகவர் நிலையம், கடற்படையின்தேசிய நீரியல் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
16 Jul 2021


